தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேரளாவில் பெண் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற விசித்திர திருவிழா: விளக்கு ஏந்தி அணிவகுத்த ஆண்களின் கண்கொள்ளா காட்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுளக்கரை ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறையாக சமய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து 40,000க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோயிலுக்கு வந்து பெண்கள் போல் வேடமணிந்து சமய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான ஆண்கள் பெண்கள் போல பட்டுப்புடவை, தாவணி அணிந்து அழகான தோற்றத்தில் கையில் விளக்கை ஏந்தி அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.

இதன்மூலம் தங்கள் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான ஒப்பனை கலைஞர்களும் அந்த பகுதியில் குவிந்தனர். தன்னுடன் வரும் தன்னுடைய மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் அமைந்திருந்தது. வேண்டுதலுக்காக வருபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்தி கடனை செலுத்துவதற்கு வருபவர்களும் ஒரே இடத்தில் கூடி அம்மனை வழிபட்டனர்.