தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேரள வியாபாரிகள் வருகை குறைவால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வாரத்தில் 2 நாட்கள் நடைபெறும் மாட்டு சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த மாதம் துவக்கத்தில் மழை சற்று குறைவால், மாடு விற்பனை ஓரளவு இருந்தது.

அச்சமயத்தில் மாடு வரத்து அதிகமாக இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால், அனைத்து ரக மாடுகளின் விற்பனையும் அதிகமாக இருந்தது. ஒரே நாளில் ரூ.1.80 கோடி முதல் ரூ.2 கோடி வரை வர்த்தகம் இருந்தது. ஆனால் கடந்த சில வாரமாக கேரளாவில் மழையால், அம்மாநிலத்தில் மாடு விற்பனை மந்தமானதால், அங்குள்ள வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்தது. இதனால் பொள்ளாச்சியில் மாடு விற்பனை மந்தமானது.

அதுபோல நேற்று நடைபெற்ற சந்தைநாளின்போது, ஆந்திரா மாடுகள் வரத்து குறைந்து, உள்ளூர் பகுதி மாடுகள் வரத்தே விற்பனைக்காக ஓரளவு கொண்டு வரப்பட்டன. ஆனால், இன்னும் தொடர் மழை தாக்கம் இருப்பதால், வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து இதனால் மாடுகள் விற்பனை மந்தமானது.

இதனால், குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. காளை மாடு ரூ.55 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.40 ஆயிரத்துககும், பசுமாடு ரூ.35 ஆயிரத்துக்கும் என இரண்டு வாரத்துக்கு முன்பு விட ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், வர்த்தகம் மிகவும் சரிந்து, ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.