தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் பலத்த மழை 140 அடியை நோக்கி முல்லைப் பெரியாறு அணை

 

Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று கல்லார், கூட்டார், நெடுங்கண்டம், தூவல் உள்பட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுங்கண்டம் பகுதியில் சாலைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன் உள்பட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மத்தன்கடை பகுதியில் நேற்று நள்ளிரவு கடையை மூடிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த தாமஸ் (66) என்பவர் சாலையில் குவிந்து கிடந்த மணல்மேட்டில் மோதி உயிரிழந்தார். இதற்கிடையே தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி இன்று காலை 5 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 139.30 அடியாக இருந்தது. இதனால் அணையின் 13 மதகுகளும் ஒன்றரை மீட்டர் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கேரளாவில் மேலும் 5 நாள் மழை நீடிக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement