தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்: டிசம்பர் 9, 11 தேதிகளில் நடைபெறுகிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் 1199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான காலாவதி அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் ஷாஜகான் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 9ம் தேதியும், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.

Advertisement

நவம்பர் 14ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் நவம்பர் 21ம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 22ம் தேதியாகும். நவம்பர் 24ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். டிசம்பர் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைமுறை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இடது முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு;

திருவனந்தபுரம் மாநகராட்சி தற்போது இடதுசாரி கூட்டணயிடம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பே திருவனந்தபுரம் மாநகராட்சியில் காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் சில முக்கிய வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. பாஜ கூட்டணி சார்பில் 67 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் கேரளாவின் முதல் பெண் டிஜிபியான ஸ்ரீலேகா மற்றும் முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.இதற்குப் பின்னர் 48 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 93 பேர் அடங்கிய இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் தற்போதைய மேயர் ஆர்யா ராஜேந்திரனின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement