தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவின் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளம்!: முதல்வர் பினராயி விஜயனுக்கும் சிபிஎம் பாராட்டு!!

சென்னை: இந்தியாவின் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளம். முதல்வர் பினராயி விஜயனுக்கும் சிபிஎம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

Advertisement

2025 நவம்பர் 1ஆம் தேதி, கேரளா, இந்தியாவின் முதல் கடும் வறுமை அற்ற மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருப்பது, சமூக நீதிக் களத்தில் ஒரு மகத்தான மைல்கல் ஆகும்!. இந்த வரலாற்றுச் சாதனைக்காக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு மேற்கொண்ட அயராத முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சாரப் பாராட்டுகிறது.

கேரளாவின் இந்தச் சாதனை வெறும் புள்ளிவிவர வெற்றியல்ல; இது மனித மாண்புக்கான புரட்சி.

விஞ்ஞானபூர்வமான கணக்கெடுப்பின் மூலம் 64,006 கடும் ஏழைக் குடும்பங்களைத் துல்லியமாக அடையாளம் கண்டது; ஒரே அளவு எல்லோரையும் திருப்திப்படுத்தாது என்ற அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட நுண் திட்டங்கள் (Micro-Plans) உருவாக்கப்பட்டது, எல்டிஎப் அரசின் மக்கள்நல அக்கறையைக் காட்டுகிறது. உணவு, சுகாதாரம், வீடு, வாழ்வாதாரம் ஆகிய நான்கு தூண்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த தலையீடுகள் மூலம், வறுமையின் பன்முகத் தன்மைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த வெற்றி, 1957 நிலச்சீர்திருத்தம் முதல் பரவலாக்கப்பட்ட ஜனநாயகம் வரையிலான, இடதுசாரிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட பல்லாண்டு கால சமூக மாற்றத்தின் உச்சகட்டமாகும். கடும் வறுமை என்பது தவிர்க்க முடியாத விதி அல்ல; மாறாக, அரசியல் உறுதிப்பாட்டால் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு சமூக அவலம் என்பதை கேரளா நிரூபித்துள்ளது. கேரள மாநிலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் ஒரு புதிய சோசலிச முன்மாதிரியை நிறுவியுள்ளது. கேரள மக்கள் மற்றும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு மார்க்சிஸ்ட் க்ம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News