தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது - கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

திருவனந்தபுரம் : காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட காப்பீட்டுதாரருக்கு காப்பீட்டு தொகை தர மறுத்த எல்.ஐ.சி. நிறுவனத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவ சிகிச்சை செலவுத் தொகை ரூ.1.8 லட்சம் தர மறுத்த எல்ஐசி-யை எதிர்த்து காப்பீட்டுதாரர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், முதல் தவணையாக காப்பீட்டுதாரருக்கு ரூ.60,000 கேட்டபோது ரூ.5,600 மட்டுமே எல்ஐசி வழங்கியது என்றும் ஏற்கனவே உடல்நலக் குறைவு இருந்ததால் ரூ.1.8 லட்சம் 2ம் தவணையை தர மறுத்தது எல்ஐசி நிறுவனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது அரசியலமைப்பின் 21வது பிரிவான வாழும் உரிமையை மீறுவதாகும். மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை செய்த பிறகு காப்பீட்டு நிறுவனம் தன்னிச்சையாக தொகை தர மறுக்க முடியாது. தன்னிச்சையாக காப்பீட்டுத் தொகையை தர மறுப்பது சிகிச்சை அளிக்க மறுப்பதற்கு இணையானதாகும். மருத்துவ சிகிச்சை பெறுவது ஒருவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுதாரரின் பலவீனத்தை இதுபோன்ற நேரங்களில் தவறாக பயன்படுத்துகின்றன. ஆயுள் காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிகழ்வுகளின்போது காப்பீட்டுதாரரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத்தான். காப்பீட்டுதாரர் கோரிய தொகையை தாமதமின்றி எல்.ஐ.சி. விடுவிக்க உத்தரவிடுகிறோம்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News