தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் - ஆளுநர் இடையே மோதல் : கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை உச்ச நீதிமன்றமே நியமிக்க முடிவு

டெல்லி : கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்குள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலை., டிஜிட்டல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் முதல்வர், ஆளுநர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காததால் பிரச்சனை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பர்திவாலா, நீதிபதி விசுவநாதன் ஆகிய இருவரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் அளித்த பதிலை சீலிடப்பட்ட கவரில் அட்டார்னி ஜெனரல் வழங்கினார். ஆளுநர் பதிலை படிக்க மறுத்த நீதிபதிகள், கேரள முதலமைச்சர், ஆளுநர் பதில்களை ஆய்வு செய்து அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதி தூலியா குழுவுக்கு ஆணையிட்டனர். மேலும் 2 கேரள பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க தலா ஒருவரின் பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் சீலிடப்பட்ட கவரில் பரிந்துரையை அறிக்கையாக டிச.18ல் சமர்பிக்க வேண்டும் என்றும் தூலியா குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை இடையே, உச்சநீதிமன்றம், கேரள ஆளுநர், முதல்வர் இடையே ஒத்திசைவு ஏற்படாதது வருத்தம் அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement