தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பேருந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

Advertisement

கேரளா: கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது வழி தெரியாமல் இருந்த ஓட்டுநர் கூகுள் மேப் பார்த்து தவறுதலாக சென்றார்.

நாடகக்குழு மலையம்பாடி, கெளகாவில் எஸ் வளைவில் வந்து கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுல்தான் பத்தேரி செல்லும் வழியில் இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காயங்குளத்தைச் சேர்ந்த அஞ்சலி (32) மற்றும் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஜெஸ்ஸி மோகன் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்த 9 பேர் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ் மரத்தில் மோதி நின்ற நிலையில் பேருந்து முன்பக்கத்தில் அமர்ந்திருந்த இருவர் பலியாகினர் என கூறினர்.

Advertisement

Related News