தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் பள்ளி மாணவியை சீரழித்த கொடூர தந்தை கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே 8ம் வகுப்பு படிக்கும் 14 வயதான சொந்த மகளை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஹோஸ்துர்க் கிராமம். இது கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 14 வயதான ஒரு மகள் உண்டு.

Advertisement

இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். இதில் மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் உடனே ஹோஸ்துர்க் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது தந்தை தான் தன்னை பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார்.

அதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து அறிந்ததும் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த மாணவியின் தந்தையை அந்த பகுதியினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும், பாஸ்போர்ட் எடுப்பதற்காகவே வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சிறுமியை பலாத்காரம் செய்தது அவர் தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதே ஹோஸ்துர்க் பகுதியில் ஒருவர் சொந்த மகளை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Related News