தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கெங்கவல்லி அருகே டிராக்டருடன் 80 அடி கிணற்றில் விழுந்த விவசாயி

*தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்
Advertisement

கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே நிலத்தை உழுவதற்காக எடுத்தபோது, டிராக்ருடன் விவசாயி கிணற்றில் விழுந்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டதால், காயங்களுடன் விவசாயி தப்பினார்.கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நிலத்தில் பயிர் செய்வதற்காக விவசாய பணியில் முருகேசன் ஈடுபட்டிருந்தார். கிணற்றின் அருகில் இருந்த டிராக்டரை ஏர் உழுவதற்கு முன்பாக, கலப்பையை மாற்றுவதற்காக இயக்கியுள்ளார். அப்போது, ரிவர்ஸ் கியரில் இருந்த டிராக்டர் பின் பக்கமாகவே இழுத்துச் சென்று, அங்கிருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.

கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில், முருகேசன் டிராக்டரோடு கிணற்றில் விழுந்தார். இதை பார்த்த அவரது மனைவி சத்தம் போடவே, அருகிலிருந்தவர்கள் ஓடிவந்தனர். இது குறித்த தகவலின் பேரில், ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் இருந்த முருகேசனை உயிருடன் மீட்டனர்.

காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, கிரேன் உதவியுடன் 2 மணி நேரம் போராடி, டிராக்டரை மீட்டனர். ஏர் உழுவதற்காக டிராக்டரை இயக்கிய போது, கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News