தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேளம்பாக்கத்தில் பரபரப்பு; ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி: பெண் கைது; கணவருக்கு வலை

துரைப்பாக்கம்: கேளம்பாக்கத்தில் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (43). இவர், நீலாங்கரையில் வசித்தபோது கொட்டிவாக்கத்தில் வசித்து வந்த அபினாஷ் மற்றும் அவரது மனைவி செல்வி நடத்திய மாத ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார்.

Advertisement

4 லட்சம் மற்றும் 5 லட்சம் என 2 ஏலச்சீட்டுகளில் திவ்யா பணம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அபினாஷ் மற்றும் செல்வி ஆகியோர் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி திவ்யாவிடமிருந்து 3.5 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டு ஏலச்சீட்டு முதிர்வடைந்தபோது செல்வியிடம் ஏலச்சீட்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அபினாசும், செல்வியும் பணத்தை தராமல் காலம் நடத்தி வந்துள்ளனர்.

2022ம் ஆண்டு ஏலச்சீட்டு பணம் மற்றும் கடனாக கொடுத்த பணம் என ரூ.17.5 லட்சத்தை கேட்டபோது, கணவன், மனைவி இருவரும் பணத்தை தர மறுத்து திவ்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனிடையே கொட்டிவாக்கம் வீட்டையும் காலி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து திவ்யா நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தியபோது, அபினாஷ் மற்றும் செல்வி இருவரும் அப்பகுதியை சேர்ந்த பலரிடம் ஏலச்சீட்டு மற்றும் கடன் பெற்று பண மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கேளம்பாக்கத்தில் தனது வீட்டில் இருந்த செல்வியை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான அபினாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News