தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவுக்கு 75 % வரி: மோடிக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்

ராஜ்கோட்: இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 50 % வரி விதித்ததற்குப் பதிலாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 75 % வரி விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘டிசம்பர் 31 வரை அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்குமதிக்கு 11 % வரி விலக்கு அளிக்கும் ஒன்றிய அரசின் முடிவு இந்திய பருத்தி விவசாயிகளைப் பாதிக்கும். இது அமெரிக்க விவசாயிகளை பணக்காரர்களாகவும், குஜராத் விவசாயிகளை ஏழைகளாகவும் மாற்றும்.

Advertisement

இந்த விஷயத்தில் பிரதமர் தைரியம் காட்ட வேண்டும். முழு நாடும் உங்கள் பின்னால் நிற்கிறது. அமெரிக்கா இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு நீங்கள் 75 % வரி விதிக்கிறீர்கள், நாடு அதைத் தாங்கத் தயாராக உள்ளது. அதை விதித்தால் போதும். பின்னர் டிரம்ப் பணிவாரா இல்லையா என்று பாருங்கள்’’ என்றார்.

Advertisement