தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் அருங்காட்சியகம் தமிழக தொல்லியல் ஆணையர் இத்தாலியில் ஒரு மாதம் ஆய்வு

Advertisement

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்கள், அதில் கண்டெடுக்கப்பட்ட கட்டுமானங்கள் ரூ.15 கோடியே 69 லட்சம் செலவில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது. கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நவீன தொழில்நுட்பங்களை அறியும் வகையில், தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் ஆகியோர் இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள கொலோசியம், போரரோமான், பாம்பீ ஆகிய நகரங்களில் முக்கிய தொல்லியல் களங்கள் உள்ளன. யுனேஸ்கோ உலக பாரம்பரிய தளமாக ரோமுடன் சேர்ந்து அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது. இதில் முக்கியமான திறந்தவெளி அருங்காட்சியகம் பாம்பீ, கொலோசியம் ஆகும். எனவே இவை இரண்டையும் நேரில் கண்டு, அதன்படி கீழடியிலும் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர்.

இத்தாலியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைந்த தொழில்நுட்பம், பராமரிப்பு, பார்வையாளர்கள் அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள ஒரு மாத பயணமாக சென்றுள்ளனர். ஏற்கனவே ஸ்பெயின் நாட்டிற்கு கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய்குமார் ஆகியோர் கடந்தாண்டு அக்டோபரில் 15 நாள் பயிற்சிக்கு சென்றனர். தமிழகத்தில் முதல் திறந்தவெளி அருங்காட்சியகம் கீழடியில் அமைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News