தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழடி அறிக்கையை திருத்த முடியாது; எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்தலாம்: அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டம்!

Advertisement

சிவகங்கை: கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கீழடி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அமர்நாத் அளித்த பேட்டியில் கூறியதாவது; எனது கண்டுபிடிப்பை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன். 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையை திருத்த மாட்டேன். ஆய்வறிக்கையை சமர்பித்தால் மீண்டும் அதில் திருத்தம் செய்ய முடியாது.

கி.மு. 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு. 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என அமர்நாத் கூறினார். மேலும், கீழடி நாகரிகத்தின் தொன்மையை சிதைக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதுபோல் தெரிவதாகவும், ஆய்வின் அடிப்படையில் கீழடி நாகரிக காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல எனவும் கூறியுள்ளார்.

கீழடியை பற்றி அறியாத ஒருவர் எப்படி அங்கு ஒன்றுமில்லை என்று கூறமுடியும் என ஸ்ரீராமன் குறித்து அமர்நாத் கருத்து தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு அறிக்கையை அளிக்க தொல்லியல் துறை ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்டிருந்தது. சங்ககால வரலாற்றை பற்றி ஒன்றிய அரசு ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கீழடி ஆய்வறிக்கையை முதலில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் படித்துப் பார்க்கட்டும் என கீழடி நாகரிகத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று கூறிய ஷெகாவத்துக்கு அமர்நாத் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement