தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேதர்நாத்துக்கு சென்ற போது நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்: கார், வீடுகள் சேதம்

ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் கேதர்நாத்துக்கு பக்தர்கள் சென்ற தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக நடுரோட்டில் தரையிறக்கப்பட்டது. இதில் கார் சேதம் அடைந்தது. உத்தரகாண்டில் படாசு தளத்தில் இருந்து கேதர்நாத்திற்கு செல்ல பக்தர்களுடன் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று புறப்பட்டுச்சென்றது. இதில் விமானி ஆர்பிஎஸ் சோதி உட்பட 6 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்டுச்சென்ற சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து அவர் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் விமானி ஹெலிகாப்டரை ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிர்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்கினார். இதில் சாலையில் நின்ற கார் மற்றும் சாலையோரம் இருந்த வீடுகள் சேதம் அடைந்தன. ஹெலிகாப்டரின் வால் பகுதி காரின் மேல் விழுந்தது. இதில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதால் கார் ஒன்று சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலையில் நிற்கும் ஹெலிகாப்டரை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Related News