கேதர்நாத்துக்கு சென்ற போது நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்: கார், வீடுகள் சேதம்
இதனால் விமானி ஹெலிகாப்டரை ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிர்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்கினார். இதில் சாலையில் நின்ற கார் மற்றும் சாலையோரம் இருந்த வீடுகள் சேதம் அடைந்தன. ஹெலிகாப்டரின் வால் பகுதி காரின் மேல் விழுந்தது. இதில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதால் கார் ஒன்று சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலையில் நிற்கும் ஹெலிகாப்டரை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.