தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கே.சி.வீரமணியை சந்தித்ததால் அதிமுகவுடன் கூட்டணியாகாது: பிரேமலதா பேட்டி

ஓசூர்: கே.சி.வீரமணியை சந்தித்ததால் அதிமுகவுடன் கூட்டணியாகாது என்று பிரேமலதா தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று தேமுதிக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். பின்னர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:

நாடு சுதந்திரமடைந்த பின்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர், அண்ணா போன்றவர்கள் கல்விக்காக உழைத்தார்கள். தற்போது, தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றால், அதனை தேமுதிக வரவேற்கும். ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. நாங்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தேமுதிக ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தாது.

நாங்கள் அதில் விதிவிலக்காக இருப்போம். எத்தனை பாரதியார், எத்தனை பெரியார் வந்தாலும், பேசினாலும் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மிக கடுமையான சட்டம் கொண்டுவந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அவரது ஓட்டலில் தங்கி இருந்ததால் அந்த சந்திப்பு நடந்தது.

ஓட்டலில் தங்கி இருந்ததற்கு எல்லாம் கூட்டணி என்றால் எப்படி. கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. திமுக, அதிமுக தனித்தனி கூட்டணி, விஜய்யின் நிலைப்பாடு ஏதும் தெரியவில்லை, சீமானை பொறுத்தவரை தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் ஜனவரி 9ம் தேதி அறிவிப்போம். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

* பிறந்த மாநிலத்தில்தான் ஓட்டுரிமை

பிரேமலதா கூறுகையில், ‘தமிழகம் வந்தாரை வாழவைக்கும். இங்கு வந்தால் வேலை செய்யலாம், சம்பாதிக்கலாம். ஆனால், ஓட்டுரிமை என்பது நீங்கள் எங்கு பிறந்து வளர்ந்தீர்களோ, அந்த மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்கக் கூடாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். ஆனால், தேர்தல் சமயத்தில் ஓட்டுபோட இங்கு வருகிறார்கள். இங்கு வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு, அவர்களது மாநிலங்களில் வாக்குரிமை இருந்தால் தான், அது வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்’ என்றார்.

Related News