தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கவின் ஆணவக் கொலையை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் முறையீடு

 

மதுரை: ஐடி மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலையை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் இன்று முறையீடு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் கவின் செல்வகணேஷ். சென்னை ஐ.டி. நிறுவன மென்பொறியாளராக பணியாற்றினார். இவரும், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்த எஸ்ஐ தம்பதி சரவணன்- கிருஷ்ணகுமாரி மகளும் பள்ளியில் படித்தபோது காதலித்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற கவின் செல்வகணேஷ், அவரது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள சித்த மருத்துவமனைக்கு கடந்த 27ம் தேதி அழைத்துச் சென்றார்.

அப்போது கவினின் காதலியின் சகோதரரான சுர்ஜித், அவரை டூவீலரில் அழைத்துச் சென்று ஆணவக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கவின், அவரது தந்தை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் இன்று காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது வக்கீல்கள் ஆஜராகி, ஐடி மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடியில் ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள மூத்த அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தி, விரைவில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் மனுவாக தாக்கல் செய்தால், அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என தெரிவித்தனர்.

Related News