தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் -சிதம்பரம் சாலையில் உள்ள தைக்கால் பகுதியில் பொட்டகுளம் என்ற குளத்தை சுற்றியுள்ள நீர்நிலை கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள், மீன் மார்க்கெட் கட்டப்பட்டன.

Advertisement

இந்நிலையில் நீர்நிலைகளில் அத்துமீறி கட்டியிருக்கும் குடியிருப்புகள், வணிக கட்டிடங்களை காலி செய்ய உரிமையாளர்களுக்கு பல முறை வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றம் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.இதன்படி அந்த பகுதிகளில் தாசில்தார் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

இதில் வருவாய் துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணியை தொடங்கினர். ஒரு சுற்றுச்சுவரை இடித்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் பல ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளை இடித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், வீடுகளை இடிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் தற்போது வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல அவகாசம் கொடுத்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கும்போது தனிநபர் ஒருவர் வணிக கட்டிடங்களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் போது பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Advertisement

Related News