தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டப்பஞ்சாயத்து பேசி எஸ்எஸ்ஐ ரூ.6 லட்சம் கமிஷன்:  ரூ.80 லட்சமும் சுருட்டல்?

Advertisement

சேலம்:  சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் முரளி (45). புதிய பஸ் நிலையம் அருகில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு தெரிந்த தமிழழகன், பிரேமா, விக்னேஷ் ஆகியோர் வந்து, வங்கியில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளதாகவும், ரூ.1.21 கோடி கடனை அடைத்து விட்டால், அதன்பிறகு பணத்தை தந்து விடுவதாகவும் கூறினர்.

இதையடுத்து நான் கடனை அடைத்து, சொத்து பத்திரத்தை தமிழழகன் பெற்றுக்கொண்ட பிறகு, கடன் தொகையை தரவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து சேலம் தலைமையிடத்து துணை கமிஷனராக இருந்த கீதாவிடம் நீதிமன்ற உத்தரவை கொடுக்க வந்தேன். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த எஸ்.எஸ்.ஐ. சரவணன், மனுவை வாங்கிக் கொண்டு நான் தான் இந்த வழக்கை விசாரிப்பேன் என கூறினார். பின்னர் தமிழழகன் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, வட்டியுடன் ரூ.1.50 கோடி வரும் நிலையில், ரூ.1.05 கோடி கொடுத்தால் போதும் என எழுதி வாங்கினார்.

இந்த ரூ.1.05 கோடியில் ரூ.25 லட்சத்தை தமிழழகன் கொடுத்தார். இதில் எஸ்.எஸ்.ஐ. சரவணன் ரூ. 6 லட்சத்தை கமிஷனாக பெற்றுக்கொண்டார். மேலும் ரூ.80 லட்சத்தை பெற்று தருவதாக கூறினார். தற்போது பணத்தை பெற்றுத்தர மறுத்து வருவதுடன், என்னை முழுவதுமாகவே ஏமாற்றிவிட்டார். எனவே புகார் கொடுக்க சென்ற என்னை தடுத்து, கமிஷன் பெற்றுக்கொண்டு ரூ.80 லட்சத்தை எதிர்தரப்பினருக்கு கிடைக்கும் வகையில் சாதகமாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக எஸ்.எஸ்.ஐ. சரவணன் பணம் பெற்றதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார். என் மீது மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் சஸ்பெண்ட் செய்வார்கள். 4வது மாதம் வேலைக்கு வந்து விடுவேன் என எஸ்.எஸ்.ஐ. சரவணன் கூறும் வீடியோ காட்சியையும் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News