தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்பாடி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை விற்பனை 15 பேர் கும்பல் சிக்கியது: 650 மாத்திரைகள் பறிமுதல்

வேலூர்: காட்பாடி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகளை விற்க முயன்ற 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 650 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 138 கடைகளில் சோதனை செய்தனர். இதில் சுமார் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்தனர்.

Advertisement

இந்நிலையில் எஸ்பி தனிப்பிரிவு போலீசார் நேற்றிரவு காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 650 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பிடிபட்டவர்களிடம் இருந்து, போதை மாத்திரைகள் எங்கிருந்து வாங்கப்படுகிறது? இதை எங்கே விற்பனை செய்யப்படுகிறது? இதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement