தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்பாடி பிரம்மபுரம்-சஞ்சீவிராயபுரம் இடையே ரூ.5 கோடியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி தீவிரம்

*லெவல் கிராசிங்குகள் பூஜ்ஜிய நிலை எட்ட நடவடிக்கை

Advertisement

வேலூர் : நாட்டில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளே இல்லாத நிலையை உருவாக்கும் பணியில் இந்தியன் ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் திருச்சி கோட்டங்களில் ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே சுரங்க பாதைகள் அமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தில் சித்தேரி, துத்திப்பட்டு பகுதிகளில் ரயில்வே சுரங்க பாதைகளும், தொரப்பாடி அரியூர், கஸ்பா ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

தற்போது வேலூர் பெங்களூரு சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் சென்னை டிவிஷனுக்கு உட்பட்ட காட்பாடி ரயில்வே சந்திப்பை ஒட்டியுள்ள பிரம்மபுரம் கிராமத்தில் இருந்து சஞ்சீவிராயபுரம் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே தண்டவாளங்களின் இருபுறமும் தலா 90 மீட்டர் நீளம் என மொத்தம் 180 மீட்டர் நீளத்துக்கு சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதில் தண்டவாள பகுதி மட்டுமே 17 மீட்டர் நீளம் கொண்டது. இப்பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடையும் என்று சென்னை ரயில்வே கோட்ட பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொறியாளர்களிடம் கேட்டபோது, ‘படிப்படியாக ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் ரயில்வே சுரங்க பாதைகள், ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் தென்னக ரயில்வேயில் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் இல்லாத பூஜ்ஜிய நிலை எட்டப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement

Related News