தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கத்திரி வெயில் முடிந்தது வட மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் வட மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி முதல் அக்னி நடசத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அது 28ம் தேதி வரை நீடித்து, நேற்றுடன் விடை பெற்றது.
Advertisement

கத்திரி வெயில் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்ததுடன், வெப்பநிலையும் குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் மற்றும் வெப்ப நிலை குறையவில்லை என்பது குறிப்பிட வேண்டிய செய்தி. இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் வரை 106 டிகிரி பதிவாகியிருக்கிறது..

அதாவது தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் சென்னைவாசிகள் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் வேலூர் 104 டிகிரி, தஞ்சாவூர் 102 டிகிரி, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, கடலூர், ஈரோடு, மதுரை விமான நிலையம் மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி நேற்று முன்தினம் வெப்பநிலை நிலவியது. இந்நிலையில்தான் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் விடை பெற்றது.

இருப்பினும், வட மாவட்டங்களின் சமவெளிப்பகுதிகளில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ்வரையில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றிலிருந்து இந்த வெப்பநிலை படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வட மாவட்டத்தில் மீண்டும் வெப்பம் மற்றும் வெயிலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்நினோ வெப்பநிலை மாறினால் இந்தியப் பெருங்கடல் மட்டத்தில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அப்படி குறைந்தால் தமிழ்நாட்டில் வெப்பநிலை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. இல்லை என்றால் தமிழகத்தின் வடக்கு கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், ஜூன் வரையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

Advertisement

Related News