தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஹல்காம் தாக்குதலை கண்டித்து காஷ்மீர் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: முதல்வராக தோல்வி அடைந்ததாக உமர் வருத்தம்

Advertisement

ஜம்மு: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருந்தார். இதற்கான சிறப்பு அமர்வு நேற்று நடந்தது. தீவிரவாத தாக்குதலில் பலியான 26 பேருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு சிறப்பு அமர்வு தொடங்கியது.

இதில், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அதன் குடிமக்கள் அனைவருக்கும் அமைதி, வளர்ச்சி, செழிப்புக்கான சூழலை மேம்படுத்துவதற்கும், மத நல்லிணக்கத்தையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க விரும்புவோரின் மோசமான திட்டங்களை தோற்கடிப்பதற்கு உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், குறிப்பாக ஊடகங்கள், உணர்ச்சிகளை தூண்டும் தீய சக்திகளுக்கு பலியாகாமல் பொறுப்பாக நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் முடிவில் பேசிய மாநில சுற்றுலா துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் உமர் அப்துல்லா, ‘‘கோழைத்தனமான பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்யும் பொறுப்பில் இருந்து நான் தவறி விட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒன்றிய அரசிடம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்க மாட்டேன். எனது அரசியல் அவ்வளவு தரம் தாழ்ந்து விடவில்லை’’ என்றார்.

 

Advertisement