தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி: மேலும் 2 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்தகவல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1ம் தேதி தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை 9வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த நீண்ட தேடுதல் வேட்டை இதுவாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். இது குறித்து ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘‘ராணுவ வீரர்கள் பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோரின் உயர்ந்த தியாகத்திற்கு சினார் கார்ப்ஸ் மதிப்பளிக்கிறது.

அவர்களின் தைரியமும், அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும்’’ என தெரிவித்துள்ளது.

இந்த சண்டையில் மேலும் 2 வீரர் காயமடைந்துள்ளனர். இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்படவில்லை. வனப்பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related News