தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு மாற்றம்: அலுவலகத்துக்கு நடந்து வந்த முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து குளிர்கால தலைநகரான ஜம்முவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் உமர் அப்துல்லா தனது அலுவலகத்துக்கு நடந்தே வந்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் குளிர்காலத்தில் ஜம்முவும் கோடைக்காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும். தர்பார் நகர்வு என்ற அழைக்கப்படும் இந்த நடைமுறை ஜம்மு காஷ்மீரின் மகாராஜா ரன்பீர்சிங் என்பவரால் 19ம் நுாற்றாண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு துணை நிலை ஆளுநராக சின்கா இருந்த போது தர்பார் நகர்வு நடைமுறை நிறுத்தப்பட்டது.

Advertisement

கடந்த ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தன் பிரசாரத்தின் போது தர்பார் நகர்வு நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா உறுதி அளித்தார். தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் கடும் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் யூனியன் பிரதேச தலைநகர் ஜம்முவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலக அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

இனி ஆறு மாதங்களுக்கு ஜம்முவில் தலைமை செயலகம் செயல்படும். இதையொட்டி முதல்வர் உமர் அப்துல்லா நேற்று ஜம்முவில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே வந்தார். அவருடன் துணை முதல்வர் சுரேந்தர் சவுத்ரி, அமைச்சர் ஜாவேத் ராணா உள்ளிட்டோர் வந்தனர். வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வந்த முதல்வர் உமர் அப்துல்லாவை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 4 ஆண்டுகளுக்கு பின் ஜம்முவில் மீண்டும் தலைமை செயலகம் செயல்பட தொடங்கியதால் ஏராளமான வியாபார பிரமுகர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement

Related News