தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் பாதை நிலச்சரிவில் சிக்கி தமிழக பக்தர் உயிரிழப்பு..!!

Advertisement

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் பாதை நிலச்சரிவில் சிக்கி தமிழக பக்தர் உயிரிழந்துள்ளார். உத்தரகண்டின் ஆறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டேராடூன், தெஹ்ரி, பவுரி, நைனிடால், சம்பாவத் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மின்னல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் பல பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

இத்தகைய மழை காரணமாக கத்ராவில் இருந்து செல்லும் பாதையில் பங்கங்கா என்ற இடத்தில் காலை 8.50 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதை குதிரை சவாரி செய்பவர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இடமாகவும் உள்ளது. மலையில் இருந்து பாறைகள் விழுந்ததில் பக்தர்கள் பலர் காயம் அடைந்த நிலையில், 4 பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவசரகால மீட்புக் குழுக்கள் விரைவாக மீட்புப் பணியைத் தொடங்கி , காயம் அடைந்த 4 பக்தர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அரக்கோணத்தை சேர்ந்த குப்பன் சீனிவாசன்(70) உயிரிழந்தார். அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Related News