தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலி; 7 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததே முக்கிய காரணம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி: கரூரில் நடந்த பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என குமரியில் பா.ஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார். பின்னர் அவர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ள நிலையில், தமிழக அரசு அளிக்கும் அறிக்கையில் என்ன குறிப்பிட்டுள்ளது என்பது தெரியவில்லை.

Advertisement

விஜய் பிரசாரத்துக்கு 7 மணி நேரம் கழித்து காலதாமதமாக வந்ததும், கூடியிருந்தவர்களுக்கு குடிநீர், உணவு வழங்காததுமே கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பெரும் துயர சம்பவம் நடந்த நிலையில் அங்கிருந்து மக்களை சந்தித்து ஏற்பாடுகளை கவனிக்காமல் விஜய் புறப்பட்டு சென்றது தலைவனுக்கான தரம் இல்லை. எதிர்காலத்தில் விஜய் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அவர் சரியான நேரத்தில் செல்வதோடு, அங்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது கட்சி தொடங்கி உள்ள அவர் இதைக்கூட செய்யவில்லை என்றால் நாளை ஆட்சிக்கு வந்து என்ன செய்ய போகிறார்? விஜய்யின் இது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த துயர சம்பவம் விஜய்யின் எதிர்கால அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News