கரூர் துயரம் - தவெக மாவட்டச் செயலருக்கு 2 நாள் எஸ்.ஐ.டி. காவல்
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. நிர்வாகி மதியழகனை 2 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்
Advertisement
Advertisement