தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் நெரிசல் விபத்தில் 41 பேர் இறந்த விவகாரம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது: சென்னை பெருநகர சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை

சென்னை: கரூர் நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை சென்னை பெருநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரை கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், இளம்பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் செய்து வருகின்றனர்.

Advertisement

இது பாதிக்கப்பட்டவர்களின் மனதை மிகவும் புண்படுத்தும் வகையில் இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையில் 25க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கரூர் விவகாரம் பேசியது மற்றும் வீடியோ வெளியிட்டதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னை சைபர் க்ரைம் போலீசார் சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பாஜ மாநில கலை பிரிவு செயலாளர் சகாயம் (38), தமிழக வெற்றி கழகத்தில் ஆவடி வட்ட செயலாளர் சரத்குமார் (32), மாங்காடு தமிழக வெற்றி கழக உறுப்பினர் சிவனேஸ்வரன் (36) ஆகியோரை கைது செய்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை மீறி மீண்டும் பொது மக்களிடையே கரூர் விபத்து குறித்து தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் அவதூறு கருத்து பரப்பவும், தன்னை புலனாய்வு நிபுணர் என்ற பெயரில் சம்பவம் நடந்த வீடியோக்களை வைத்து பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது ஐடி சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இன்று காலை சென்னை சைபர் க்ரைம் போலீசார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம் அவதூறாக பரப்பிய வீடியோக்கள் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு கூட, விஜயை சொட்டை என்று கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் திட்டுவதுபோல வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் கூட்டத்தில் புகுந்து சிலர் கத்தியால் வெட்டினர் என்றும் நடக்காத சம்பவத்தை நடந்ததுபோல வெளியிட்டுள்ளார். இதனால் கலவரத்தை தூண்டும் வகையில் அவர் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுவரை 25க்கும் மேற்பட்ட யூடியூபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வீடியோ பதிவுகள் மற்றும் கருத்துகள் கூறியது தொடர்பாக ஆய்வு செய்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement