தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் சம்பவத்தை தமிழ்நாடு அரசு நேர்மையாக அணுகி கொண்டிருக்கிறது: திருமாவளவன் பேட்டி

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் குடும்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 15ம் தேதி ரூ.50 ஆயிரம் வீதம் வழங்க இருக்கிறோம்.

Advertisement

தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கி இருக்கிறது. இன்னும் கூடுதலாக நிதி வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதை கடந்து இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட பா.ஜ. கூட்டணி கட்சிகள் நினைக்கிறது. விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.

விஜய்யை கைது செய்ய வேண்டும், சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த பிரச்னையில் நேர்மையாக அணுகிக் கொண்டிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம்.

கரூர் துயரம் தொடர்பாக அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு குழு அமைத்திருப்பதையும் வரவேற்கிறோம். இது போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது வக்கீல் ராகேஷ் கிஷோர் செருப்பு வீச முயற்சி செய்திருக்கிறார். ராகேஷ் கிஷோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News