தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் வரும் 10ல் விசாரணை

புதுடெல்லி: கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பானவழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மனுதாரர் இந்த விவகாரத்திற்கு தொடர்பில்லாத நபர் என்பதால் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

அதேநேரத்தில் தமிழக காவல்துறையின் விசாரணையில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பின்னர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் பிச்சமுத்து என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்னிலையில் நேற்று ஒரு முறையீட்டை வைத்தார்.

அதில், “உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்ட வழக்கில் தான் ஒரு மனுதாரராக இல்லை என்றாலும், எனது 13 வயது மகனை இழந்து பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு தொடர்பான உண்மை நிலையை வெளிக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார். இதேப்போன்ற கோரிக்கையோடு பாஜ கவுன்சிலர் உமா ஆனந்தன் என்பவரும் கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Related News