தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு வரவைத்து பார்ப்பது கட்சி தலைவருக்கு அழகு அல்ல: வேல்முருகன் எம்எல்ஏ பேட்டி

கடலூர்: கடலூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நாங்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்ற பாசிச பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இடம் பெற மாட்டோம். அதில் அமைகின்ற கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம். நாங்கள் இப்போது இடதுசாரிகள் உள்ளடக்கிய சமூக நீதிப் பேசுகின்ற இயக்கங்கள் இருக்க கூடிய திமுக கூட்டணியில் இருக்கிறோம்.

Advertisement

ஒரு அரசியல் புரிதல் இல்லாமல் தனக்கான தலைவர்களை திரையரங்குகளில் தேடுகின்ற மோசமான ஒரு சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இது நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு ஆரோக்கியமான அறிவு சார்ந்த சமூக நீதி அரசியலுக்கு சமத்துவ அரசியலுக்கு ஏற்புடையதல்ல. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை வரவழைத்து சந்திப்பு என்பது ஒரு கட்சித் தலைவருக்கும், கட்சி தலைமைக்கும் நல்ல அணுகுமுறை அல்ல. பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு வரவைத்து பார்ப்பது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு அழகு அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News