தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி விவகாரம் நீதிபதியை சந்தித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை

கரூர்: கரூரில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்ைக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 306 பேர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் 10 பேர் ஆஜராகி அவர்களிடம் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் 2வது நாளாக நேற்று காலை 10 மணியளவில் 7 பேர், சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர்.

Advertisement

இதில் அவர்கள் அளித்த வாக்குமூலங்களை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் 3 பேர் ஆவணங்களுடன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 க்கு சென்றனர். அப்போது நீதிபதியின் தனி அறையில் நீதிபதி பரத்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 10 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின்னர் அதிகாரிகள் 3 பேர் மீண்டும் பயணியர் விடுதிக்கு காரில் திரும்பினர். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் கோரியும், எஸ்ஐடி சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்ப்பதற்காகவும் நீதிபதியை நேரில் சந்திக்க சிபிஐ அதிகாரிகள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News