தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் துயரம்.. தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி எம்.பி. பேட்டி!!

சென்னை: தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது இதுவரை பார்த்திராத ஒன்று என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; கரூரில் இப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இந்த துயர சம்பவத்தில் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சூழ்நிலையை சாந்தப்படுத்துவதுதான் அரசியல் கட்சியின் கடமை. கரூர் சம்பவத்தில் யாரையும் பழியோ, குற்றமோ சொல்ல வேண்டிய நேரமல்ல. சமூக வலைத்தளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

Advertisement

பாதிக்கப்பட்ட மக்களோடு திமுகவும், அரசும் உடன் நின்றது. கரூர் துயரத்துக்கு யார் காரணம் என்பது விசாரணையில் வெளிவரும். தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது இதுவரை பார்த்திராத ஒன்று. தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது மனிதாபிமானம் இல்லை என்பதை காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்காமல் தனது பாதுகாப்பு மட்டும் முக்கியம் என்பது நான் இதுவரை அறிந்திராத ஒன்று.

அமைதியை ஏற்படுத்துவதற்கு மாறாக இன்னும் பிரச்சினையை தூண்டுவதுபோல் பேசுகின்றனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது உச்சகட்ட பொறுப்பின்மை; தவிர்க்கப்பட வேண்டியது. புரட்சி வெடிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டது உச்சகட்ட பொறுப்பின்மை. கரூரில் அனைத்து கட்சிகளின் சார்பில் தலைவர்கள், தொண்டர்கள் மக்களுக்கு உதவி செய்தனர். சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டர்கள் கூட அங்கு இல்லாதது மனிதாபிமானம் இல்லாததுபோல் தெரிகிறது என அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News