தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் நெரிசலில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று கூறி தவெகவினர் தட்டிக்கழிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

மதுரை : கரூர் நெரிசலில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று கூறி தவெகவினர் தட்டிக்கழிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன், இவருக்கு அடைக்கலம் தந்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் 29ம்தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இதில் கரூர் ஆறுமுக பாளையத்தைச் சேர்ந்த தவெக கரூர் மத்திய நகரச் செயலாளர் பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் கூட மனுதாரர் இல்லை எனவே ஜாமின் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "இந்த சம்பவத்தை பொறுத்தவரை, பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்பு உள்ளது" என குறிப்பிட்டு, வழக்கில் ஏன் சிபிஐ எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், "சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News