தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்புதான்.. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும்: வில்சன் பேட்டி

டெல்லி : கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்புதான் என டெல்லியில் திமுக வழக்கறிஞர் வில்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை தொடரும். இன்று வரை நடத்திய விசாரணை விவரங்களை சிபிஐக்கு மாற்றும்படிதான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று வரை எஸ்.ஐ.டி. நடத்திய விசாரணை சரியானதுதான் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. மோசடியாக தீர்ப்பு பெற்றது உறுதியானால் அது செல்லாததாகிவிடும். வழக்கு தாக்கல் செய்தது மோசடி என தெரியப்பட்டால் உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பையே திரும்பப் பெறக் கூடும். இடைக்கால உத்தரவு பிறப்பித்த பின்புதான் பாதிக்கப்பட்ட இருவரும் காணொலி மூலம் ஆஜராகினர். உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள ஆணை இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதுதான்.

Advertisement

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்காது. சிபிஐ விசாரணை கேட்காத தவெக, எதற்காக இந்த தீர்ப்பை கொண்டாடுகின்றனர். தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எஸ்ஐடி வேண்டுமென்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் கேட்கவில்லை.எஸ்ஐடி அமைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தமிழ்நாடு அரசின் தலையீடு இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவில் தமிழ்நாடு அரசின் தலையீடு இருப்பதாக ஆதவ் அர்ஜுன் கூறியிருந்தால் நீதிமன்ற அவமதிப்பாகும் என தெரிவித்தார்.

 

Advertisement

Related News