தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் சம்பவத்தை விசாரிக்க விசாரணை குழு அமைத்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி

 

Advertisement

டெல்லி: கரூர் துயர சம்பவத்தில், சம்பவ இடத்தை பார்வையிட, பாதிக்கப்பட்டோரை சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு அமைத்தது. எம்.பி.க்கள் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, ப்ரஜ் லால், ரேகா ஷர்மா, உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.

கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த நடிகர் விஜய்யின் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் இருவரும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 8 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை அமைத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூரில் தவெக கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு, பாஜக தலைவர் நட்டா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் பிராத்தித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவும் எட்டு பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை அவர் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த எம்பிக்கள் குழுவினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து பாஜக தலைமைக்கு அறிக்கை அளிப்பார்கள்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், எம்பிக்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிராஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புட்டா மகேஷ் குமார் (தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

Related News