தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

INX மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியது டெல்லி உயர்நீதிமன்றம்!!

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வெளிநாடு செல்ல சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கிய ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமமானது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெறுவதற்காக வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எம்.பி. ஆகியோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த வழக்கில்கடந்த 2018ல் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல நீதிமன்றம் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் போது ஒவ்வொரு முறையும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று அந்த நிபந்தனையில் கூறப்படிருந்தது.இந்த நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்வதால் நிபந்தனைகளுக்கு தளர்வு கேட்டு கார்த்திக் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர தூடேஜா, வெளிநாடு செல்லும் கார்த்தி சிதம்பரம் அங்கு என்ன செய்யப்போகிறார் என்பதை மட்டும் இரண்டு வாரங்களுக்கு முன்பாக விசாரணை நீதிமன்றத்தில் வழங்கினால் போதும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News