தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு; நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு அதிகரித்ததால், மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் நேற்று காலை 6வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் மாலை, நீர்வரத்து விநாடிக்கு 35,850 அடியாக அதிகரித்தது. நேற்று காலை விநாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்தது. அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 3வது நாளாக தடை நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 30ம்தேதி 118.65 அடியாக இருந்த நீர்மட்டம், மெல்ல உயர்ந்து நேற்று காலை நடப்பாண்டில் 6வது முறையாக மீண்டும் 120 அடியாக நிரம்பியது. அதன்படி, 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.

Advertisement

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பதற்கு முன்பாக, எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டது. மேலும், உபரிநீர் போக்கி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டனர்.

மேலும், வெள்ள நீர் அருகே செல்லக்கூடாது, வெள்ள நீரில் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது. கால்நடைகளை குளிப்பாட்டக் கூடாது. அருகே சென்று செல்பி எடுக்கக் கூடாது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,800 கனஅடியாக உள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,500 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கி வழியாக விநாடிக்கு 12,500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு, மேல்மட்ட மதகுகள் வழியாக 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement