தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கர்நாடக அமைச்சரின் உதவியாளர் கைது: மகாராஷ்டிரா போலீஸ் நடவடிக்கை

Advertisement

மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கர்நாடக அமைச்சரின் நெருங்கிய உதவியாளரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், இதில் அரசியல் தலைவர்களின் உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்கள் அடிபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில், கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மும்பை, சாங்க்லி உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12ம் தேதி மும்பை காவல்துறை, சிபிஐ மற்றும் இன்டர்போல் இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதுங்கியிருந்த போதைப்பொருள் சப்ளையரான முஸ்தஃபா முகமது குபாவாலாவை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கேயின் நெருங்கிய உதவியாளரும், கலபுர்கி தெற்கு பகுதி காங்கிரஸ் கட்சியின் தலைவருமான லிங்கராஜ் கன்னி, மகாராஷ்டிராவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரின் பெயர்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement