தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் அதிரடி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது

பெங்களூரு: ஹாசன் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட 4 பாலியல் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு பிரஜ்வல் தாக்கல் செய்த மனு, கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பிரஜ்வல் தாக்கல் செய்த மனுவையும் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement

பிரஜ்வல் தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, பலவீனமான ஆதரங்களை அடிப்படையாக கொண்டு பிரஜ்வலுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.முதகல் மற்றும் வெங்கடேஷ் நாயக் அமர்வு, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு (பிரஜ்வல்) எதிராக பல்வேறு பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மனுதாரரை வெளியே விட்டால், அது சாட்சியங்களை சிதைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாது மனுதாரர் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்வதால், தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement