தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரசவ வார்டில் படுக்கை இல்லை கர்நாடக அரசு மருத்துவமனை வாசலிலேயே பிரசவித்த பெண்: கீழே விழுந்து குழந்தை மரணம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே உள்ள காகோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ரூபா என்ற பெண் பிரசவத்திற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ஹாவேரி அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் பிரசவ வார்டு நிறைந்துவிட்டதால், படுக்கை வசதி எதுவும் இல்லை என்று கூறி ரூபாவை அட்மிட் செய்யாமல், பிரசவ வார்டின் வெளியே வராண்டாவில் அமரவைத்தனர்.

Advertisement

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அலட்சியம் காட்டி யாருமே கவனிக்காத நிலையில், கழிப்பறைக்கு செல்லும் வழியிலேயே ரூபாவிற்கு குழந்தை பிறந்து, குழந்தை கீழே தரையில் விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தது. பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், ஊழியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக துறை ரீதியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தலைமை மருத்துவர் பி.ஆர்.ஹவனூர் தெரிவித்தார். காவல் துணை ஆணையர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி, குழந்தை பாதுகாப்பு அதிகாரி, மகப்பேறு மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement