தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்செட்டி அருகே பரபரப்பு; தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கிய கர்நாடக அரசு பஸ்: 25 பயணிகள் உயிர் தப்பினர்

Advertisement

ஓசூர்: ஒகேனக்கல் நோக்கி சென்ற கர்நாடக அரசு பஸ், பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி வனப்பகுதியில் உள்ள மண் திட்டின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம், கனகபுராவில் இருந்து அம்மாநில அரசு பஸ், 25 பயணிகளுடன் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காவல் நிலையம் அடுத்துள்ள சீங்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர வனப்பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த மண் திட்டின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் நடத்துனர் உட்பட 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. மற்ற பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்த 3 பேரை, பயணிகள் மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மண் திட்டின் மீது பஸ் மோதி நின்றதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement