தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: மக்கள் கடும் அவதி

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் 15 சதவீதம் ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 6 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அரசு பேருந்துகள் இயங்காததால், அரசு, தனியார், ஐடி நிறுவன ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் அதிகாலை முதல் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்கள் இயங்காததால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவமும் நடந்தது. ஆனால் கர்நாடகாவுக்கு தமிழக பஸ்கள் வழக்கம் போல் எந்த தடையுமின்றி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* உயர்நீதிமன்றம் கண்டனத்தால் போராட்டம் நிறுத்திவைப்பு

கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் கர்நாடக உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போக்குவரத்து சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை நேற்று விசாரணையின் போது நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 7ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து ஊழியர்சங்கம் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

Related News