தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து உயர் ரக போதை மாத்திரை விற்பனை: கோவையில் 5 பேர் கைது

கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க கோவை மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கோவை கரும்புக்கடை காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின் மற்றும் 116 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
Advertisement

விசாரணையில், அவர்கள் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி பகுதியை சேர்ந்த பிரவின் செட்டி (36), கோவை குறிச்சி பிரிவை சேர்ந்த சாகுல் அமீது (27), சவுரிபாளையத்தைச் சேர்ந்த முருகன் (27), குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்கான் (24) மற்றும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த அக்பர் அலி (28) என்பது தெரியவந்தது. கைதான் பிரவின் செட்டி கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்தில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அவர் அங்கிருந்து உயர் ரக போதை மாத்திரைகளை கொண்டு வந்து சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி ஆகியோர் மூலம் விற்பனை செய்ய முயன்றுள்ளார். 14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை ரூ.60 விற்று வந்தம் தெரியவந்து உள்ளது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

* போதைக்கு அடிமை மாணவன் சாவு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஒரிச்சேரிப்புதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கௌதம் (16). பத்தாம் வகுப்பு தேர்வில் 319 மதிப்பெண் பெற்றிருந்தார். விடுமுறையில் வீட்டில் இருந்த கௌதமுக்கு கடந்த 11ம் தேதி திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கௌதம் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான். விசாரணையில், கெளதம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் மற்றும் பஞ்சர் ஒட்ட பயன்படும் பேஸ்ட்டை அதிகளவில் பயன்படுத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவன் இறந்ததாக கூறப்படுகிறது.

Advertisement