தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கர்நாடக மாநில தர்மஸ்தலம் தேவஸ்தானத்தில் 500 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேட்டி

திருமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணாநேற்று திருப்பதி கோயிலுக்கு வெளியே கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலம் கோயிலில் 1980 முதல் 500 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கோயில் வளாகத்திலேயே புதைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதன் காரணமாக உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளனர்.

கோயில் புனிதமான கோயில் வளாகமா அல்லது மயானமா என்று தெரியாத வகையில் 500 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். 1980ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்த பகுதியில் போட்டியிட ஒருவர் முன் வந்தார்.

அவர் கூறிய ஐந்து நாட்களிலேயே அவரது 15 வயது மகள் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். எனவே தர்மஸ்தலம் அறங்காவலர் குழுவை கலைத்துவிட்டு இந்து அறநிலையத்துறையுடன் இணைக்க வேண்டும். அங்கு அறங்காவலர் குழுவினர் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* தர்மஸ்தலாவில் 16வது இடத்தில் தோண்டும் பணி தொடங்கியது

தர்மஸ்தலா கிராமத்தில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைத்துள்ளதாக அங்கு துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் புகார் அளித்தார். இதையடுத்து, அங்கு கடந்த 13 நாட்களாக சிறப்பு புலனாய்வு போலீசார், புகார்தாரருடன், புதைக்கப்பட்ட உடல்களை தேடும்பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று புகார்தாரர் கூறிய ரத்னகிரி மலைப்பகுதியில், உடல்களை தேடும் பணி நடந்தது.

நேற்று 16வது பாயின்ட் என குறிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் முன்னிலையில் சோதனை தொடங்கி, குழிகளை தோண்டினர். அப்போது அங்கு பாறைகள் இருந்ததால், சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து சோதனை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்ஐடி குழுவுக்கு காவல்நிலையம் அமைக்க அனுமதி வழங்கிய மாநில அரசு எப்ஐஆர் பதிவு செய்யும் அதிகாரமும் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

Related News