கர்நாடகாவில் 2 நாளில் 28 மான்கள் மரணம்
பெலகாவி: கர்நாடாகாவின் பெலகாவியில் கிட்டூர் ராணி சென்னம்மா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இரண்டு நாட்களில் 28 அரிய வகை மான்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார். வனத்துறை உதவி பாதுகாவலர் நாகராஜ் பால்ஹாசூரி கூறுகையில் பாக்டீரியா தொற்று காரணமாக மான்கள் இறந்திருக்க கூடும் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Advertisement
Advertisement