தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றி செல்லாது: மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு; கோலார் மாவட்டம் மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஒய்.சஞ்சேகவுடாவின் வெற்றி செல்லாது என்று அறிவித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் 4 வாரத்திற்குள் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவை அறிவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோலார் தொகுதி மாலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஒய்.நஞ்சேகவுடா வெற்றி பெற்றார்.

Advertisement

அவரிடம் தோல்வியை தழுவிய பாஜ வேட்பாளர் மஞ்சுநாத் கவுடா, நஞ்சேகவுடாவின் வெற்றியை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நஞ்சேகவுடா வெறும் 248 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாகக் கூறி, வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மஞ்சுநாத் கவுடா மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.தேவதாஸ், மாலூர் தொகுதி எம்.எல்.ஏவாக நஞ்சேகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்ததுடன், 4 வாரங்களுக்குள் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடித்து அறிவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் எம்.எல்.ஏ நஞ்சேகவுடாவும், காங்கிரஸ் கட்சியும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நஞ்சேகவுடா தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக ஐகோர்ட் அனுமதித்தது. எனவே நஞ்சேகவுடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவை பெற வேண்டும். இல்லாவிட்டால், மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ நஞ்சேகவுடா எம்.எல்.ஏ பதவியை இழக்க நேரிடும்.

Advertisement

Related News