தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் பரபரப்பு பாஜ மாவட்ட தலைவர் எஸ்ஐ நடுரோட்டில் சண்டை

பெங்களூரு: மதுகிரி பாஜ மாவட்ட தலைவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் காதிலிங்கப்பாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜ மாநிலத் தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் துர்கா ஸ்ரீ ஓட்டல் சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மதுகிரி பாஜ மாவட்ட தலைவர் ஹனுமந்த்கவுடா நிர்வாகிகளுடன் கூட்டமாக நின்றிருந்தார். இதைபார்த்த எஸ்ஐ காதிலிங்கப்பா, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் பாஜ மாவட்ட தலைவர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஐ அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து போலீஸ் எஸ்ஐயை பாஜ மாவட்ட தலைவர் பதிலுக்கு தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜயேந்திரா, ‘ மதுகிரி பாஜ மாவட்டத் தலைவர் ஹனுமந்த்கவுடாவை காவல் உதவி ஆய்வாளர் காதிலிங்கப்பா தாக்கியிருக்கிறார். அவரை டிஜிபி உடனடியாக சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜ மக்களுடன் களத்தில் இறங்கி போராடும்’’ என்று எச்சரித்துள்ளார்.
Advertisement

Advertisement

Related News