தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் இருமொழி கொள்கை: முதல்வருக்கு கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் கடிதம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கன்னடமொழியை பாதுகாக்க வேண்டுமானால் இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் புருசோத்தம பிளிமலே கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநில அரசின் கன்னட வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை கீழ் இயங்கி வரும் கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக இருக்கும் புருசோத்தம பிளிமலே, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதிவுள்ளார். அதில் கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியை பாதுகாக்க வேண்டுமானால், இரு மொழி கல்வி கொள்கை தான் அவசியம் என்று பிரபல ஆய்வாளர் ரஷே் பெல்லம்கொண்டா, நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையை மேற்கோள் காட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றினால், கிராமம் முதல் மாநகரங்கள் வரை இயங்கி வரும் பள்ளிகளில் கன்னடம் கட்டாயம் ஒருமொழி பாடமாக இருக்கும். அதன் மூலம் நமது மொழியை பாதுகாத்து கொள்ள வேண்டும். இரு மொழி கொள்கை தான் கர்நாடகாவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
Advertisement

Advertisement